கொச்சி: குசாட் பல்கலை.யில் நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி
கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர்.
கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர்.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் பிரபல பாடகி நிகிதா காந்தி பங்கேற்ற இசை நிகழ்ச்சி திறந்தவெளி அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் களமச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கூட்டம் கூட்டமாக ஆடிட்டோரியத்திற்குள் நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
இதனால் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை விரைவாக நெரிசலாக மாறியது, இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றார்.