இந்தியா

கொச்சி: குசாட் பல்கலை.யில் நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி

DIN

கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர். 

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் பிரபல பாடகி நிகிதா காந்தி பங்கேற்ற இசை நிகழ்ச்சி திறந்தவெளி அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் களமச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கூட்டம் கூட்டமாக ஆடிட்டோரியத்திற்குள் நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை விரைவாக நெரிசலாக மாறியது, இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT