மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம்: முதல்வர் சௌகான்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார்.
அதோடு, சக்தி பீடங்களில் ஒன்றான ஹர்சித்தி கோயில் மற்றும் மங்கல்நாத் கோயிலிலும் முதல்வர் சௌகான் வழிபாடு செய்தார்.
கோயிலில் தலைமை பூசாரி முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளித்து வழிபாடுகளைச் செய்தனர்.
Advertisement
Advertisement
வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி,
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவர் தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது, ஆச்சரியமானது.
பேரவைத் தேர்தலில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இதையும் படிக்க: தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார் பிரதமர் மோடி!
காங்கிரஸ் தனது அறிவை இழந்துவிட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நாடு முழுவதும் சோகத்திலிருந்த நிலையில், காங்கிரஸ் மட்டும் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர்.
இந்த வெளிப்பாடு தேசத்துரோகத்தின் எல்லையை எட்டியுள்ளது. காங்கிரஸ் குருடாகி, ராகுல் காந்தி தேசியவாதியாகிவிட்டார்..வெட்கப்படுகிறோம் என்று முதல்வர் சௌகான் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.