முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் தனித்தனியே பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் ராகுல், பிரியங்கா

அக்டோபர் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் முறையே ராகுலும், பிரியங்காவும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்
பகிர்:


போபால்: நவம்பர் மாதத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், அக்டோபர் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் முறையே ராகுலும், பிரியங்காவும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு நவம்பர் மாதத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.

இந்த நிலையில்தான், அக்டோபர் 10ஆம் தேதி ஷஹ்தோல் மாவட்டத்தில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, அக்டோபர் 12ஆம் த்தி மாண்ட்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →