கோப்புப்படம் 
இந்தியா

பணி மாற்றம்: பெண் ஓட்டுநர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் ரயில்வே!

ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களின் பணி மாற்றம் தொடர்பான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது.

DIN

ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களின் பணி மாற்றம் தொடர்பான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது.

பெண் ஓட்டுநர்களும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களும் கடுமையான, பாதுகாப்பற்ற பணிச்சூழல் காரணமாக தங்கள் பணியை மாற்றிக் கொள்ள விரும்புவதாக அவர்கள் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. தங்களை வேறு பணிக்கு மாற்றக் கோரி பெண் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ரயில்வே மண்டலங்களில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களின் பணி மாற்றம் தொடர்பான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடந்த 4ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் "இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு பணி மாற்றம் கோரும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை அனுப்பி வைக்கவும்' என்று கோரப்பட்டுள்ளது.
சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் சில பெண் ஓட்டுநர்களும், துணை பெண் ஓட்டுநர்களும் அலுவலகங்களில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணிவகையை அதிகாரபூர்வமாக மாற்றாமலேயே அவர்கள் இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த நடவடிக்கையை ரயில்வே பணியாளர் சங்கமான ஐஆர்எல்ஆர்ஓ எதிர்க்கிறது. இது தொடர்பாக இச்சங்கத்தின் செயல் தலைவர் சஞ்சய் பந்தி கூறுகையில் "பணிவகையை அதிகாரபூர்வமாக மாற்றாமலேயே சில பெண் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை அல்ல. 

ரயில்களை ஓட்டும் பணியிலும் தண்டவாளப் பராமரிப்புப் பணியிலும் பெண் ஊழியர்கள் இணைந்த பிறகே அந்தப் பணிகளின் கடினமான தன்மையை அவர்கள் உணர்கின்றனர். பெண் ஊழியர்களுக்கு சேவைகள் மற்றும் வசதிகள் வழங்குவதில் பெரும் குறைகள் காணப்படுகின்றன. 

அவர்களுக்கு நிரந்தரமில்லாத பணிநேரங்களும் உரிய நேரத்தில் ஓய்வு இல்லாததும் இதற்கு உதாரணங்களாகும். எனவே பெண் ஊழியர்களின் பணிவகையை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்குப் பதிலாக களப்பணிகளில் பெண் ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

பிங்க் பியூட்டி.... கெளரி கிஷன்!

முதல்முறை ஆஸ்திரேலியா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கதாநாயகனாகும் இன்பநிதி! இயக்குநர் இவரா?

4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: நிஃப்டி 25,100க்கு கீழே, சென்செக்ஸ் 81,773 புள்ளிகளாக நிறைவு!

SCROLL FOR NEXT