முகப்பு
இந்தியா

மும்பை: மதிய உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 16 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
கோப்புப் படம்.
பகிர்:

மும்பை: மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 16 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உணவு விஷமாகியதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பிரிஹன் மும்பை மாநகராட்சியின் அனிக் காவ் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றார் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளியில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 9 சிறுவர்களும், 7 சிறுமிகளும் சதாப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தெரியவந்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →