முகப்பு
இந்தியா

‘கூகுள் க்ரோமில்’ பாதுகாப்பு குறைபாடு: புதுப்பிக்க பயனா்களுக்கு அறிவுறுத்தல்

பிரபல இணைய தேடுபொறியான ‘கூகுள் க்ரோமில்’ பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக பயனா்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரபல இணைய தேடுபொறியான ‘கூகுள் க்ரோமில்’ பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக பயனா்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு என்பது நாட்டில் கணினி பாதுகாப்பு குறைப்பாடுகள் கண்டறியும் போது அதற்கான பதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் நிறுவனம் ஆகும்.

இந்நிலையில், கூகுள் க்ரோம் தேடுபொறியில் கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் விவரம்: தற்போதைய பாதுகாப்பு குறைபாடுகளின் ஆபத்துகள் மூலம் கூகுள் க்ரோம் நிறுவப்பட்டுள்ள அமைப்பின் குறியீட்டுகளை( கோட்) இயக்கி சேவையைக் கட்டுப்படுத்த முடியும்.

‘விண்டோஸ்’ இயங்குதளத்துக்கான (ஓ.எஸ்) கூகுள் க்ரோம், 118.0.5993.70 மற்றும் 118.0.5993.71-க்கு முந்தைய பதிப்புகள் மற்றும் ‘ஐ-மேக்’ மற்றும் ‘லினக்ஸ்’ இயங்குதளத்துக்கான கூகுள் க்ரோம், 118.0.5993.70-க்கு முந்தைய பதிப்புகளில் மென்பொருள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பதிப்புகளைத் தவிா்த்து பாதுகாப்பான புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்த பயனா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →