இந்தியா

பஞ்சாப்: காரர் காவல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

DIN

பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலி மாவட்டத்தில் உள்ள காரர் காவல் நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.
அதேசமயம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த மாதம் குரலி கிராமத்தில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT