முகப்பு
Photo Courtesy, PTC NEWS
இந்தியா

பஞ்சாப்: காரர் காவல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

இந்தியா

பஞ்சாப்: காரர் காவல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
Photo Courtesy, PTC NEWS
பகிர்:

பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலி மாவட்டத்தில் உள்ள காரர் காவல் நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.
அதேசமயம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த மாதம் குரலி கிராமத்தில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →