கோப்பிலிருந்து.. 
இந்தியா

மும்பையில் ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம், நாராயண்டோஹ் ரயில் நிலையத்துக்கு அருகே பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகளில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

PTI


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம், நாராயண்டோஹ் ரயில் நிலையத்துக்கு அருகே பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகளில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அஷ்தி ரயில் நிலையத்திலிருந்து அகமதுநகர் ரயில்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில், திடீரென தீப்பற்றியது.

ரயில் பெட்டிகள் முழுவதும் தீ பரவுவதற்குள், நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

SCROLL FOR NEXT