இந்தியா

அவதூறு வழக்கிலிருந்து பின்வாங்கிய மஹுவா மொய்த்ரா வழக்குரைஞர்!

DIN


பாஜக எம்.பி.க்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து அவரின் வழக்குரைஞர் வாதாட மறுத்து பின்வாங்கினார். 

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக மஹுவா மீது பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஜெய் ஆனந்த்  தேஹத்ராய் ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்தற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் இருவர் மீதும் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து மஹுவா மொய்த்ரா வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் விலகுவதாகத் தெரிவித்து விலகினார். இந்த வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது தொடர்பாக பேசிய வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், இது தொடர்பாக எதையும் பேசவிரும்பவில்லை. முன்பு ஜெய் ஆனந்திடம் பேசினேன். இது தொடர்பாக எதையும் பேசவில்லை. பின்னர் இந்த வழக்கில் நான் ஆஜராவதற்கு ஜெய் ஆனந்த் மறுப்பு தெரிவித்தார். அதனால் இன்று இந்த வழக்கிலிருந்து விலகினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT