ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுகிறார் ஆந்திர முதல்வர்!
விபத்து நடந்த பகுதியை முதல்வர் பார்வையிட உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தின் கண்டகப்பள்ளி பகுதியில் ரயில் விபத்து நடந்த பகுதியை இன்று (அக்டோபர் 30) ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிடுகிறார்.
மேலும் ரயில் விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்திப்பதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் பார்வையிட உள்ளதாகவும், அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஆந்திர மாநில முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் சுமார் 19 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க | ‘வந்தே பாரத்’ ரயில்களும் விரிசல் தண்டவாளங்களும்!
இந்த பயங்கர ரயில் விபத்தை தொடர்ந்து 33 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டன. 6 ரயில்கள் மாற்றி விடப்பட்டன. ஆந்திர மாநில கல்வி அமைச்சர் சத்யநாராயணா கூறும்போது, “ரயில் விபத்து குறித்து அறிந்ததும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்ததாகவும், உடனடியாக மீட்பு பணிகளை முடுக்கிவிட்டதாகவும் கூறினார். மேலும் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் கூறினார்.”
இந்நிலையில் இன்று விபத்து நடந்த பகுதிகளை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் பார்வையிட உள்ளார்.
இதையும் படிக்க | ஆந்திர ரயில் விபத்தில் பலி 14 ஆக உயர்வு! 50 பேர் காயம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.