முகப்பு
இந்தியா

எதிரிகள் எனது ஆசிரியர்கள்: ராகுல்

இந்திய மக்கள் குருக்கள் போன்றவர்கள் என்றும் தன்னை எதிர்ப்பவர்களை ஆசிரியர்களாகக் கருதுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

இந்திய மக்கள் குருக்கள் போன்றவர்கள் என்றும் தன்னை எதிர்ப்பவர்களை ஆசிரியர்களாகக் கருதுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 

ராகுல் தனது முகநூல் பதிவில், 

தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு பணிவான அஞ்சலி. 

வாழ்க்கையில் குருவுக்கு மிக உயர்ந்த இடம் உண்டு. உங்கள் வாழ்க்கையின் பாதையை ஒளிரச் செய்து, சரியான பாதையில் கொண்டுசெல்பவர்கள் ஆசிரியர்கள். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமத்துவம் என்ற அறிவை நமக்கு வழங்கிய மகாத்மா காந்தி, கௌதம புத்தர், ஸ்ரீ நாராயண குரு போன்ற பெரிய மனிதர்களை எனது குருவாக நான் கருதுகிறேன். 

நமது நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குருக்கள் ஒவ்வொரு பிரச்னையையும் தைரியமாக எதிர்த்துப் போராட நம்மை ஊக்குவிக்கிறார்கள்.

எனது எதிரிகளை ஆசிரியர்களாகக் கருதுகிறேன். அவர்களின் நடத்தை, அவர்களின் பொய்கள், அவர்களின் வார்த்தைகள் மூலம் நான் செல்லும் பாதை முற்றிலும் சரியானது என்று எனக்குக் கற்பிக்கிறார்கள், மேலும் அதைத் தொடர்வது மிகவும் குறைவு என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.