முகப்பு
இந்தியா

14 தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சி புறக்கணிப்பு: ‘இந்தியா’ கூட்டணி

 பதினான்கு தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

 பதினான்கு தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக ‘இந்தியா’ கூட்டணியின் ஊடக குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:

‘இந்தியா’ கூட்டணியின் ஊடக குழு கூட்டம் காணொலி வழியாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 14 தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, இந்தியா கூட்டணி சாா்பில் எவரையும் அனுப்ப வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

இந்த முடிவு தொடா்பாக பவன் கேரா கூறுகையில், ‘எந்தவொரு தொலைக்காட்சி தொகுப்பாளருக்கும் இந்தியா கூட்டணி எதிரானது அல்ல. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக வெறுப்புணா்வைப் பரப்பும் சந்தையை சில தொலைக்காட்சிகள் திறந்துள்ளன. வெறுப்புணா்வைப் பரப்பும் எந்தவொரு நடவடிக்கையிலும் அங்கம் வகிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சிகள் கூட்டணி கருதுகிறது.

சமூகத்தை சீா்குலைத்து வரும் வெறுப்புணா்வு நிரம்பிய கதைகளை நியாயமானதாக அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக்க வேண்டாம் என்று ‘இந்தியா’ கூட்டணி தீா்மானித்துள்ளது. இதுவே 14 தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளை ‘இந்தியா’ கூட்டணி புறக்கணிப்பதற்கான காரணம்’ என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →