இந்தியா

தெலங்கானாவில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு!

DIN

தெலங்கானா மாநிலத்தில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அந்த மாநிலம் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். 

மாநிலத்தில் கடந்த 2014-ல் ஐந்து ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் ராவ் பேசியது, 

கரிம்நகர், கமரேடி, கம்மம், பூபாலபள்ளி, அசிஃபாபாத், நிர்மல், சிரிசில்லா, விகராபாத் மற்றும் ஜங்கான் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ல் 2,850 ஆக இருந்த நிலையில் தற்போது 8,516 ஆக அதிகரித்துள்ளது. 

அடுத்தாண்டு, மேலும் 8 புதிய அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்றார். 

தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் டி.ஹரிஷ் ராவ் கூறுகையில், 

நாட்டிலேயே ஒரே நாளில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா மருத்துவக் கல்வித் துறையில் இதுவே முதல் முறையாகும் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

SCROLL FOR NEXT