தர்மசாலா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 69 வயது முதியவர் மற்றும் அவரது பேரன் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்தபோது தாக்கூர் தாஸ் மற்றும் அவரது பேரன் அங்கித் (19) ஆகியோர் பாலம்பூர் அருகே உள்ள ராக் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுடன் இருந்த தாகூர் தாஸ் உறவினர் சஞ்சய் குமார் உயிர் பிழைத்து, சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். அதிகாரிகள் உடல்களை மீட்டெடுக்கவும், மீதமுள்ள நபர்களை மீட்கவும் ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், தர்மசாலா உட்கோட்டத்தின் ஒரு பகுதியான மஹால் சக்பன் தார் பகுதியில் மின்னல் தாக்கி 60க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.