முகப்பு
இந்தியா

புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடியேற்றம்!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) தேசியக் கொடியேற்றினார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:59 AM
பகிர்:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) தேசியக் கொடியேற்றினார். 
 
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கஜ் துவார் என அழைக்கப்படும் நுழைவு வாயில் அருகே தேசியக் கொடியை ஏற்றினார். 

தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷிகாங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் செப்.18-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தொடா் முதலில் பழைய கட்டடத்தில் தொடங்கி பின்னா் புதிய கட்டடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.