பியூஷ் கோயல் 
இந்தியா

நாடாளுமன்ற இறுதி நாளிலாவது ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்: பாஜக

பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இறுதி நாளான இன்று உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார். 

DIN

நாடாளுமன்ற இறுதி நாளான இன்று உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினரும் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார். 

நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று (செப். 18) தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தில் கடைசி நாளாக இன்றைய கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்றத்தில் இன்று நமது கடைசி நாள். இந்த நாளிலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஒழுக்கத்தை நிலைநாட்டுவோம் என நம்புகிறேன். முரண்பாடற்ற ஒன்றுபட்ட கருத்துகளை முன்வைத்து ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT