இந்தியா

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்: ஆந்திரத்தில் அதிர்ச்சி! 

ஆந்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஆந்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்ய சாய் மாவட்டம் தர்மாவரம் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிரசாத் (26) தனது நண்பருடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சுருண்டு விழுந்தார். அவர் உடனே தர்மாவரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

விழாவின்போது இளைஞர்கள் நடனமாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. 

கடந்த மாதம் தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் 16 வயது மாணவி கல்லூரி விழாவில் நடனமாடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார். 

நைலகொண்டனப்பள்ளியில் ஜூனியர் கல்லூரில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார். 

ஜூலை மாதம், கம்மத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சியின் போது 31 வயது இளைஞர் மாரடைப்பால் இறந்தார். ஜூன் மாதம், ஜக்தியால் நகரில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்தார். மார்ச் மாதம், ஆந்திர மாநிலம் பாபட்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

கரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT