கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடகம்: உறைவிடப் பள்ளியின் சுவர் இடிந்து சிறுவன் பலி, இருவர் காயம்!

கர்நாடகத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். 

DIN

கர்நாடகத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். 

பிடாதி அருகே எச்.கொல்லஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள உறைவிடப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்றது. 

உயிரிழந்த மாணவன் உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசிக் கௌடா ஆவார். காலையில் முகம் கழுவிக்கொண்டிருந்த கௌசிக் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது.

தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்ட மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT