முகப்பு
இந்தியா

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நாக்பூர்!

நாக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ள அம்பாஜாரி ஏரிப் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 23 செப்டம்பர் 2023, 1:32 pm IST
பகிர்:

நாக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்ரத்தின் உள்ள நாக்பூரின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பாஜாரி ஏரி பகுதியில் சிக்கிய 6 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுவினர் சனிக்கிழமை வெளியேற்றினர்.

இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "காலையில் தண்ணீர் தோள்பட்டை வரை இருந்தது. எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன், நாங்கள் ஒரு படகைக் கொண்டு வந்து, மக்களை மீட்டோம். அவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கியுள்ளோம்." எனத் தெரிவித்தார்.

நாக்பூரில் நீரில் கார்கள் மூழ்கியும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments