நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்: பெரும் விபத்து தவிர்ப்பு!
உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
தில்லி புறநகர் பகுதியான ஷகுர்பஸ்தியில் இருந்து மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்றிரவு 10.48 மணியளவில் மின்சார ரயில்(04446) வந்துள்ளது. ரயில் நிலையத்தின் 2ஏ நடைமேடையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.
அப்போது நடைமேடை அருகே வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மேலே ஏறி மின்கம்பத்தை இடித்து நின்றது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேதமடைந்த நடைமேடை, மின்கம்பம் உள்ளிட்டவை சரிசெய்யும் பணியில் வடக்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.