இந்தியா

ம.பி. தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

மத்திய பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

DIN

மத்திய பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேச தேர்தலில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். 

மேலும் பாஜகவை கடுமையாகச் சாடிய சமாஜவாதி தலைவர், 'பாஜகவின் நோக்கம் ஒருபோதும் தெளிவாக இல்லை, பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி, பணவீக்கம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது'  என்று கூறினார். 

தொடர்ந்து, மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை நாட்டின் ஒரு முக்கியமான தேர்தலாக மக்கள் கருத வேண்டும். இதன் முடிவுகள் நாட்டில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

SCROLL FOR NEXT