இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
பாகிஸ்தானில் இன்று காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
Advertisement
ராவல்பிண்டியை மையமாகக் கொண்டு 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.
கடந்த மாதம் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.