முகப்பு
இந்தியா

ஜம்முவில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்முவின் அர்னியா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். 

Updated On : 31 ஜூலை, 2023 at 11:40 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:15 AM

ஜம்முவின் அர்னியா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். 

நேற்றிரவு ஆர்னியா எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் இருக்கும்போது சந்தேகம் ஏற்படும் வகையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. 

இந்நிலையில், சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் எல்லையில் ஊடுருவ முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். 

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.