மத்தியப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்கோன் மாவட்டத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.