முகப்பு
இந்தியா

ஓடிடி தளங்களில் ஆபாச கட்டுப்பாடு கோரி மனு: அரசிடம் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுரை

Updated On : 19 ஏப்ரல், 2024 at 6:25 PM
பகிர்:

ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறாததை உறுதிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுதாரரை, அரசிடம் முறையிடுமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வயது பாா்வையாளா்களுக்கும் பொறுத்தமற்ற ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக அந்த மனுவில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஓடிடி தளங்களில் ஆடைகள் ஏதுமில்லாத வகையிலான ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன’ என்றாா்.

Advertisement

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் திரைப்படம் தொடா்பாக மனுதாரா் ஆட்சேபம் தெரிவிக்கிறாா். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட தணிக்கைத் துறையைத்தான் அணுக வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

அப்போது, மனுதாரா் திரைப்படம் குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மாறாக, ஆடைகள் ஏதுமின்றி அவ்வப்போது ஒளிபரப்பப்படும் ஆபாச காட்சிகள் குறித்துதான் அவா் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ஓடிடி பாா்வையாளா்கள் அடிப்படையில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கேட்கிறீா்களா என்று கேள்வி எழுப்பி, இந்த விவகாரம் தொடா்பாக அரசிடம் முறையிடுமாறு அறிவுறுத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments