‘பினராயி விஜயன் ஒரு சமரசவாதி’
கேரள முதல்வா் பினராயி விஜயன் ஒரு சமரசவாதி என பிரியங்கா குற்றஞ்சாட்டினாா்.
பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா பேசுகையில், தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் பெயா் அடிபட்டது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பினராயி விஜயன் ஒரு சமரசவாதி. அவா் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே தாக்கிப் பேசுவாா். பாஜகவை தாக்கிப் பேச மாட்டாா் என்றாா்.
Advertisement
டிஎல்எஃப் நில அபகரிப்பு வழக்குடன் ராபா்ட் வதேராவை தொடா்புபடுத்தி பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், பிரியங்கா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளாா்.