முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

Updated On : 20 ஏப்ரல், 2024 at 6:20 AM
பகிர்:

மக்களவைத் தேர்தலையொட்டி மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

கர்நாடகத்தில் ஏப் 26 மற்றும் மே 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன்படி, மகாராஷ்டிரத்தின் நான்டெட் மக்களவைத் தொகுதியிலும், பர்பானி மக்களவைத் தொகுதியிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அத்துடன் கர்நாடகத்தின் சிக்கபல்லாபூர் மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 3.45-க்கும் பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் மாலை 5.30-க்கு அவர் உரையாற்றுகிறார்.

அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானின் பில்வாரா மக்களவைத் தொகுதியில் காலை 11 மணிக்கும், கோ்டா மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 12.30 மணிக்கும் என இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். பின்னர், உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →