இந்தியா

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

DIN

பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே ஒருவகையான தண்டனையாகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

"நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே ஒருவகையான தண்டனையாகிவிட்டது!

சாதாரண ரயில்களில் பொதுப்பெட்டிகளை குறைத்து 'எலைட் ரயில்களை' மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்ற மக்கள்கூட தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாத நிலையில், சாமானியர்கள் தரையிலும், கழிப்பறையிலும் பதுங்கி பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் அரசு, தனது கொள்கைகளால் ரயில்வே துறையை பலவீனப்படுத்தி, தகுதியற்றதாக நிரூபிக்க விரும்புகிறது, இதனைக்கொண்டு தன் நண்பர்களுக்கு விற்க ஒரு காரணத்தை தேடுகிறது.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT