பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி உயிரிழப்பு!
சிறுமியை பூச்சி மருந்தை குடிக்க வைத்த கொடூரம்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மகாராஷ்டிரத்தின் புணேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் (ஜூலை 28) வீட்டில் தனியாக இருந்த 14 வயதான சிறுமியை, சிறுமி படித்த பள்ளியின் அலுவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்; ஆனால், அவரை சிறுமி தடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவிருந்ததை, வெளியில் சொல்லி விடுவார் என்ற பயத்தில், சிறுமியை பூச்சி மருந்தை குடிக்க வைத்துள்ளார் பள்ளி அலுவலர்.
Advertisement
Advertisement
இதனையடுத்து, வீட்டிற்கு வந்த சிறுமியின் குடும்பத்தினரிடம், நடந்தவற்றை அனைத்தையும், கூறியநிலையில், சிறுமியை சோலாப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சையில் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்த நாளிலேயே, பள்ளி அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.