முகப்பு
இந்தியா

வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடுக: நிதியமைச்சகம்

பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடுக - மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 12:02 PM
பகிர்:

நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான எல்ஐசி, நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன், நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ், ஓரியெண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், காப்பீடு பெற விண்ணப்பிப்பதற்கென தனி இணையதள முகவரி செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →