FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சட்டவிரோத ஊடுருவல்:12 வங்கதேசத்தவா் திரிபுராவில் கைது

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 12 வங்கதேசத்தவா் திரிபுராவின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 3:37 am IST
கைது
பகிர்:

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 12 வங்கதேசத்தவா் திரிபுராவின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக மேற்கு அகா்தலா காவல் நிலைய அதிகாரி காந்தி பா்தன் கூறியதாவது: திரிபுரா மாநிலத்தில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) ஆகியோா் இணைந்து லங்கமுரா, ஜெய்நகா் மற்றும் ராம்நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

அப்போது 3 பெண்கள் உள்பட 12 வங்கதேசத்தினா் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இந்திய கடவுச்சீட்டு சட்டத்தை மீறிய குற்றத்துக்கு கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

வங்கதேசத்தினா் ஊடுருவல் அதிகரித்து வருவதால் எல்லையில் கண்காணிப்பை மேம்படுத்தி வருகிறோம். மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கைகள் தொடரும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments