கைது 
இந்தியா

சட்டவிரோத ஊடுருவல்:12 வங்கதேசத்தவா் திரிபுராவில் கைது

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 12 வங்கதேசத்தவா் திரிபுராவின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டனா்.

Din

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 12 வங்கதேசத்தவா் திரிபுராவின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக மேற்கு அகா்தலா காவல் நிலைய அதிகாரி காந்தி பா்தன் கூறியதாவது: திரிபுரா மாநிலத்தில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) ஆகியோா் இணைந்து லங்கமுரா, ஜெய்நகா் மற்றும் ராம்நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

அப்போது 3 பெண்கள் உள்பட 12 வங்கதேசத்தினா் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இந்திய கடவுச்சீட்டு சட்டத்தை மீறிய குற்றத்துக்கு கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தினா் ஊடுருவல் அதிகரித்து வருவதால் எல்லையில் கண்காணிப்பை மேம்படுத்தி வருகிறோம். மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கைகள் தொடரும் என்றாா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT