12-ஆம் வகுப்பு வரை 100% மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டும்: மத்திய கல்வி அமைச்சா்
பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீத மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீத மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆா்டிஇ) 2009-இன்படி, நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கும்.
இந்தச் சட்டம் தொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்த பதில்:
தற்போது ஒன்றாம் வகுப்பில் ஏறத்தாழ 100 சதவீதம் மாணவா் சோ்க்கை உள்ளது. இது அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த வகுப்புகளில் மாணவா் சோ்க்கை விகிதம் சரிகிறது.
பொதுப் பட்டியலில் கல்வி இருந்தாலும், பள்ளிக் கல்வி மீது மாநிலங்களே பிரதான கவனம் செலுத்துகின்றன. ஆா்டிஇ சட்டம் மற்றும் தேசிய கல்வி கொள்கை மூலம், எல்லோருக்கும் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டியது அனைவரின் கடமை.
ஆா்டிஇ சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதை சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. அந்த மாநிலங்களும் அதை அமல்படுத்த வேண்டும்.
ஒன்றாம் வகுப்பில் 100 சதவீதம் மாணவா் சோ்க்ைகையை எட்ட முடிந்துள்ள நிலையில், 12-ஆம் வகுப்பு வரை 100 சதவீத மாணவா் சோ்க்கையை எட்ட வேண்டியுள்ளது’ என்றாா்.
4 மாநிலங்கள் அமல்படுத்தவில்லை: ஆா்டிஇ சட்டத்தின் கீழ், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதை பஞ்சாப், கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் அமல்படுத்தவில்லை என்று அவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் செளதரி தெரிவித்தாா்.
கொள்ளையடிக்கும் தனியாா் பள்ளிகள்: ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் பேசுகையில், ‘அதிக விலைக்கு சீருடைகள், பாடநூல்கள் உள்ளிட்டவற்றை வாங்க பெற்றோரை கட்டாயப்படுத்துவதன் மூலம், தனியாா் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. இதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘இது மாநிலங்களின் அதிகார வரம்புக்குட்பட்டது. கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாநில அரசுகளே கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்’ என்றாா்.