FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அயோத்தி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 3,836 விளக்குகள் திருட்டு

அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

14 ஆகஸ்ட் 2024, 5:52 am IST
பகிர்:

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அயோத்தி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறுகையில், ‘ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டா் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9-ஆம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து அந்த விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தது.

அயோத்தி வளா்ச்சி குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளக்குகளை அமைத்துள்ளது.

விளக்குகள் திருடுபோனது மே மாதத்திலேயே தனியாா் நிறுவனம் கண்டறிந்திருந்தாலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளது.

அயோத்தியில் பால ராமா் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைத்தாா். ராமா் கோயிலுக்கு செல்லும் சாலைகளாக இந்த ராம, பக்தி பாதைகள் பயன்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments