இந்தியா

ராஜஸ்தான்: முத்தலாக் கூறிய கணவர் கைது!

வெளிநாட்டில் பாகிஸ்தான் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது வழக்குப்பதிவு

DIN

குவைத்துக்கு பணிபுரிய சென்ற இந்தியர், முத்தலாக் கூறியதால் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ரஹ்மான் என்பவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், குவைத்துக்கு பணிபுரிய சென்ற ரஹ்மான், அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளதாக, தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், குவைத்திலிருந்து மொபைல் போன் மூலம், ஃபரிதாவை தொடர்புகொண்ட ரஹ்மான், ஃபரிதாவிடம் முத்தலாக் கூறி, விவாகரத்தும் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஃபரிதா கடந்த மாதம், ரஹ்மான் மீது வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ததாகக் கூறி, ஹனுமன்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, ரஹ்மான் இந்தியாவுக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த காவல்துறையினர், ரஹ்மானை விமான நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT