சுக்விந்த்ர் குமார் சுகி 
இந்தியா

ஆம் ஆத்மியில் இணைந்தார் அகாலி தள எம்எல்ஏ!

தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக எப்போதும் உழைத்தவர் சுகி..

பிடிஐ

சிரோமணி அகாலி தளத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இரு முறை எம்எல்ஏவாக இருந்த சுக்விந்தர் குமார் சுகி ஆம் ஆத்மியில் இணைந்தார்.

சுக்விந்தர் குமார் சுகி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக எப்போதும் உழைத்ததாகக் கூறிய மான் சுகியை கட்சிக்கு வரவேற்றார்.

இந்த நிகழ்வின்போது ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான சந்தீப் பதக்கும் கலந்துகொண்டார்.

மருத்துவரான சுகி கடந்த 2017ஆம் ஆண்டு எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில் உள்ள பங்கா சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT