நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து! இந்து மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு!
மகாராஷ்டிரத்தில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசிய இந்து மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு
மகாராஷ்டிரத்தில் மத நிகழ்ச்சியில், இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய ராம்கிரி மஹாராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷா பஞ்சலே கிராமத்தில், இந்து மதத் தலைவர் ராம்கிரி மஹாராஜ் தலைமையில் ஆன்மீகக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முகமது நபி, இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துகளை, ராம்கிரி கூறியுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இஸ்லாம் மதத்தின் மீதான ராம்கிரியின் கருத்துகளால், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதங்களிடையே பகைமையை ஊக்குவித்தல், சமாதான உணர்வை வேண்டுமென்றே அவமதிப்பது, குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் ராம்கிரி மஹாராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ராம்கிரி மஹாராஜ், "இந்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எது வந்தாலும் நான் எதிர்கொள்வேன்" என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.