கோப்புப் படம் 
இந்தியா

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து! இந்து மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிரத்தில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசிய இந்து மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தில் மத நிகழ்ச்சியில், இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய ராம்கிரி மஹாராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷா பஞ்சலே கிராமத்தில், இந்து மதத் தலைவர் ராம்கிரி மஹாராஜ் தலைமையில் ஆன்மீகக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முகமது நபி, இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துகளை, ராம்கிரி கூறியுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாம் மதத்தின் மீதான ராம்கிரியின் கருத்துகளால், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதங்களிடையே பகைமையை ஊக்குவித்தல், சமாதான உணர்வை வேண்டுமென்றே அவமதிப்பது, குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் ராம்கிரி மஹாராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ராம்கிரி மஹாராஜ், "இந்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எது வந்தாலும் நான் எதிர்கொள்வேன்" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

SCROLL FOR NEXT