குருகிராம் வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.
குருகிராமில் உள்ளக வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் நாய் படைகள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,
ஆம்பியண்ஸ் வணிக நிறுவனத்திற்கு இன்று காலை 9.27 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் hiddenbones101@gmail மூலம் அனுப்பப்பட்டது.
அதில், வணிக கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். கட்டடத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள். யாரும் தப்பிக்க முடியாது.
நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் பைஜ் மற்றும் நோரா" என்று டிஎல்எஃப் உதவிக் காவல் ஆணையர் விகாஸ் கௌசிக் கூறுகையில், இதுவரை தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.
வணிக வளாகத்தில் 70 சதவீதம் தேடுதல் நிறைவடைந்த நிலையில், இதுவரை எந்தவித சந்தேகத்திற்குரிய பொருளும் கிடைக்கவில்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டும் என்று போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுவரை, இதுபோன்ற மின்னஞ்சல்கள் மக்களைப் பயமுறுத்தும் புரளிகள் என கண்டறியப்பட்டு, அவற்றின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.