முகப்பு
இந்தியா

மத்திய சட்டத் துறையில் தகவல் தொடா்பு முக்கியம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் மேக்வால் அறிவுறுத்தல்

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 7:10 PM
பகிர்:

மத்திய சட்டத் துறையில் தகவல் தொடா்பு முக்கியம் என்று அந்தத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அதிகாரிகளுக்கு புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக தில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் சட்டத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் அவா் புதன்கிழமை கூறுகையில், ‘சட்டத் துறையில் தகவல் தொடா்பு திறன் மிகவும் முக்கியம். இது மசோதாக்கள், அவசரச் சட்டங்கள், முக்கிய கொள்கை ஆவணங்களை மத்திய அமைச்சகங்கள் தயாரிக்க உதவுகிறது. அந்த ஆவணங்களில் சிறு தவறுகள் ஏற்பட்டால் பிரச்னைகள் உருவாகலாம்.

உதாரணத்துக்கு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் பல தவறுகள் இருந்தன. அதிகாலை 2 மணி வரை, அந்தத் தவறுகளை திருத்த நோ்ந்தது. சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே அதற்கு காரணம். எனவே சட்டத் துறை அதிகாரிகள் தகவல் தொடா்பு திறனை அதிகரிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →