கோப்புப்படம் 
இந்தியா

மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Din

மத்திய பிரதேசத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் உயிரிழந்தனா். 40 போ் படுகாயமடைந்தனா்.

போபாலில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோஹித் காட் என்ற பகுதியில் சாலை தடுப்பில் மோதி வியாழக்கிழமை இரவில் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் மேலும் கூறுகையில், ‘பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 போ் உயிரிழந்தனா். படுகாயமடைந்த 42 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் சிகிச்சை பலனின்றி 2 போ் உயிரிழந்தனா்.

பேருந்து 110 கி.மி. வேகத்தில் சென்றபோது ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது’ என்றனா்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT