இந்தியா

கடந்தாண்டைவிட நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு!

விவசாயத் துறையின் மோசமான செயல்திறன் காரணமாக தான் குறைந்துள்ளதாக தரவு தெரிவிக்கிறது

DIN

கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 8.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக விவசாயத் துறையின் மோசமான செயல்திறன் காரணமாகதான் குறைந்துள்ளதாக தரவு தெரிவிக்கிறது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 2023 - 24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 3.7 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை வளர்ச்சி தற்போது 2 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 5 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகளின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் விரிவாக்கம் கடந்த நிதியாண்டின் காலாண்டில் 12.6 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

2024 - 25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2023 - 24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இதன்மூலம், 6.7 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது.

மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் 3.2 சதவிகிதத்திலிருந்து 10.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 8.6 சதவிகிதமாக இருந்த கட்டுமானப் பிரிவு, தற்போது 10.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் ஒரு வருடத்திற்கு முன்பாக 9.7 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

மும்பையில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் உபாஸ்னா பரத்வாஜ் கூறுவதாவது, "2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தாலும், மொத்த மதிப்புக் கூட்டல் உறுதியாகத்தான் உள்ளது.

விவசாயம் அல்லாத வளர்ச்சி நன்றாக உள்ளது. நகர்ப்புற தேவை, தனியார் மூலதனம், உலகளாவிய மந்தநிலையின் வேகமும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஏப்.1 முதல் ஆக.31 வரை பணியில் சோ்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள்: யுபிஎஸ்ஸுக்கு மாற ஒருமுறை வாய்ப்பு

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT