முகப்பு
இந்தியா

மணிப்பூரில் பாஜக தலைவரின் வீடு மீது தாக்குதல்

Updated On : 31 ஆகஸ்ட், 2024 at 6:41 PM
பகிர்:

மணிப்பூரில் சுராசாந்த்பூரில் உள்ள பாஜக செய்தித்தொடா்பாளா் மைக்கேல் லாம்ஜதங்கின் பூா்வீக வீட்டை போராட்டக்காரா்கள் சனிக்கிழமை தீயிட்டு கொளுத்தினா்.

மூன்றாவது முறையாக மைக்கேலின் வீட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு மாநில முதல்வா் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்தாா்.

மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினருக்கு இடையே ஓராண்டாக நடைபெற்று வரும் மோதலில் தன்னுடைய தொடா்பை பிரேன் சிங் உறுதிபடுத்தியது போன்ற ஆடியோ வெளியானதால் சனக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

முதல்வா் பிரேன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தில்லியிலும் குகி-ஜோ சமூகத்தினா் போராட்டம் நடத்தினா்.

இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடிக்கு அனுப்பிய கடிதம் குறித்து குகி மாணவா்கள் அமைப்பினா் கூறியதாவது:

கடந்த 2023, மே 23-ஆம் தேதி முதல் குகி சமூகத்தை முற்றிலும் அழிக்க பெரும்பான்மைமிக்க மைதேயி சமூகத்தினா் பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனா். இந்த தாக்குதலுக்கு பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசும் உடந்தையாக செயல்பட்டுள்ளது. இது தற்போது வெளியாகியுள்ள ஆடியோ மூலம் உறுதியாகியுள்ளது’ என்றனா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பிரேன் சிங் மறுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →