விபத்துக்குள்ளான கிரிஸ்டல் ஹெலிகாப்டர் 
இந்தியா

தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

பழுதான ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்து

DIN

பழுதான ஹெலிகாப்டரை பழுது பார்க்கக் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

உத்தரகண்டில் பழுதான கிரிஸ்டல் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை, கேதார்நாத்திலிருந்து கௌச்சார் விமான நிலையத்திற்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம், இன்று காலையில் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், சிறிது தூரம் சென்றவுடன், ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்று காரணமாக எம்ஐ-17 ஹெலிகாப்டர், தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக, ஹெலிகாப்டர் தாரு முகாமுக்கு அருகில் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மண்டாகினி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இருப்பினும், கிரிஸ்டல் ஹெலிகாப்டரில் பயணிகளோ அல்லது சாமான்களோ எதுவும் இல்லாததால், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT