முகப்பு
இந்தியா

கேரளத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

Updated On : 3 டிசம்பர், 2024 at 9:23 AM
பகிர்:

கேரளத்தின் வட மாவட்டங்களில் இன்று(டிச .3) கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகா்ந்து கேரளத்துக்கும் கா்நாடகத்துக்கும் இடைப்பட்ட அரபிக்கடலை இன்று(டிச .3) அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகா்ந்து அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக கேரளத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘சிவப்பு எச்சரிகையும்’, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ’ஆரஞ்ச் எச்சரிக்கையும்’ விடப்பட்டுள்ளது.

மலைப்பிரதேசங்களான மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள் எச்சரிக்கையும்’ விடப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேற்கு நோக்கி நகரும் போது, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →