இந்தியா

சம்பல் செல்லும் ராகுல்: பாதுகாப்பு அதிகரிப்பு! போக்குவரத்து நெரிசல்!

ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்துக்குச் செல்வதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்துக்குச் செல்வதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி இருவரும் சம்பல் செல்வதால், தில்லி - மீரட் விரைவுச் சாலையில் உள்ள காஸிபூர் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பலில் பதற்றம் நிலவியது.

மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

SCROLL FOR NEXT