மக்களவையில் பேசிய ராகுல் காந்தி  படம் - சன்சத்
இந்தியா

நாட்டின் பாதுகாப்பு பற்றி ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

மக்களவையில் தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் சிரித்த விடியோ இணையத்தில் வைரல்.

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களவையில் தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் சிரித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தங்கள் கட்சித் தலைவர் பேசும்போது ஏன் சிரிக்கிறீர்கள்? என அவைத் தலைவர் கேட்டதற்கு ராகுல் காந்தி பதில் அளித்து, தனது உரையைத் தொடர்ந்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று (பிப். 2) முதல் பிப். 4 வரை நடைபெறுகிறது. மக்களவையில் தேசிய பாதுகாப்பு குறித்தும், எல்லை ஆக்கிரமிப்பு குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பேச வாய்ப்பு கேட்டு பல முறை மறுக்கப்பட்டு, அதன் பிறகே அவருக்கு பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, ''நான் கடந்த இரண்டு மணிநேரமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேசத் துடிக்கிறேன். அது மிகவும் முக்கியமானது. அது வேறு ஒன்றுமில்லை தேசிய பாதுகாப்பு குறித்துதான்'' எனக் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் சிரித்தனர்.

இதனை சுட்டிக்காட்டிய அவைத் தலைவர், ''தேசிய பாதுகாப்பு குறித்து பேசும்போது, அதுவும் உங்கள் தலைவரைப் பார்த்து நீங்கள் சிரிப்பது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Rahul gandhi speak on National Security Congress MPs are laughing viral video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவடுகள்...

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல்

தமிழ் கற்பதைத் தவமாய் கருதியவர்...

வானுக்கு வரம்...

SCROLL FOR NEXT