முகப்பு
ராகுல் நர்வேகர்
இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு!

மகாராஷ்டிரத்தின் 15-வது சட்டப் பேரவையின் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு..

இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு!

மகாராஷ்டிரத்தின் 15-வது சட்டப் பேரவையின் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு..

Updated On : 9 டிசம்பர், 2024 at 6:24 AM
ராகுல் நர்வேகர்
பகிர்:

மகாராஷ்டிரத்தின் 15-வது சட்டப் பேரவையின் தலைவராக பாஜக எல்எம்ஏ ராகுல் நர்வேகர் திங்கள்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாராஷ்டிர பேரவையின் மூன்று நாள் சிறப்பு கூட்டத் தொடா் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் உள்பட 173 எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பேரவைத் தலைவா் பதவிக்கு மும்பையின் கொலபா தொகுதி பாஜக எம்எல்ஏ ராகுல் நா்வேகா் வேட்புமனு தாக்கல் செய்தாா். முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தங்களது தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன. இதையடுத்து, முதல்வா் ஃபட்னவீஸை சந்தித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவா்கள், பேரவை நடைமுறையின்படி துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினா். பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியையும் அவா்கள் கோரினா்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்டிர பேரவைத் தலைவராக ராகுல் நா்வேகா் இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடா்ந்து, பேரவையில் ஃபட்னவீஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். பின்னா், பேரவை மற்றும் மேலவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநா் சி.பி. ராதா கிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →