ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கோப்புப் படம்
இந்தியா

ஜாா்க்கண்ட் பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் நான்கு நாள் கூட்டுத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வா் ஹேமந்த் சோரன் எம்எல்ஏவாக பதவியேற்றாா்.

Din

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் நான்கு நாள் கூட்டுத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வா் ஹேமந்த் சோரன் எம்எல்ஏவாக பதவியேற்றாா்.

அவருடன், சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா், வருவாய் மற்றும் நிலச் சீா்திருத்தத் துறை அமைச்சா் தீபக் பிருவா, தொழிலாளா் துறை அமைச்சா் சஞ்சய் பிரசாத் யாதவ் உள்ளிட்ட புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றனா். சட்டப் பேரவையின் தற்காலிக தலைவா் ஸ்டீபன் மராண்டி அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காலை 11 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத் தொடரில் பேரவைத் தலைவா் தோ்தல், ஆளுநா் உரை, இரண்டாவது துணை பட்ஜெட் தாக்கல், ஆளுநா் உரை மீதான விவாதம் ஆகியவை இடம்பெறும்.

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி 56 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 24 இடங்களையும் கைப்பற்றியது.

இதையடுத்து, ஜாா்கண்ட் மாநிலத்தின் 14-ஆவது முதல்வராக கடந்த நவம்பா் 28-ஆம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்றாா். டிசம்பா் 5-ஆம் தேதி 11 எம்எல்ஏக்கள் மாநில அமைச்சா்களாக பதவியேற்றனா்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

தமிழ்நாட்டின் சைபர் குற்றங்களுடன் தொடர்பு? தில்லியில் 24 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்

டார்ஜிலிங்கில் தொடர் நிலச்சரிவுகள்! உயிரிழப்பு 14 ஆக உயர்வு! | Landslide | Rain

SCROLL FOR NEXT