முகப்பு
இந்தியா

தில்லி போதை மறுவாழ்வு மையம் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

தில்லியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையம் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

Updated On : 20 டிசம்பர், 2024 at 12:48 PM
மருத்துவமனை - பிரதி படம்
பகிர்:

தில்லியில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில், அரசு அனுமதி எதுவும் இன்றி இயங்கி வந்த மையமே, போதைக்கு அடிமையாக்கும் மையமாக இயங்கி வந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

போதைக்கு அடிமையானவர்களின் ஒரே வாய்ப்பாக இருக்கும் போதை மறுவாழ்வு மையங்களில் நடக்கும் அநீதிகள், ஏதேனும் உயிரிழப்புகளின்போது வெளி உலகத்துக்கு வரும். ஒரு சில நாள்களில் காணாமல் போய்விடும்.

ஆனால், இந்த போதை மறுவாழ்வு மையத்தைப் பற்றிய தகவல்கள் அதையெல்லாம் விஞ்சிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற அளவில் தகவலைக் கேட்கும்போது அச்சம் ஏற்படுவதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி சிக்கியபோது, இந்த போதை மறுவாழ்வு(?) மையத்தில்தான் அவர்களுக்கு போதைப்பொருள்கள் கிடைத்ததாகக் கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

இதில் முக்கிய அதிர்ச்சி என்வென்றால், அரசு அனுமதியோ, போதை மறுவாழ்வு மையத்தை நடத்த எந்த உரிமமோ இவர்கள் பெறவில்லை. அங்கிருப்பவர்களுக்கு போதைப் பொருளை வழங்கும் மையமாகவும் போதைப் பொருள் வாங்க வரும் இளைஞர்களுக்கு ஏராளமான போதைப் பொட்டலங்களைக் கொடுத்த இதர பகுதிகளில் விற்பனை செய்ய தூண்டியும் வந்துள்ளனர்.

போலியான மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் அங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு அதிக போதைப் பொருளைக் கொடுத்து அவர்களை போதையிலிருந்து வாழ்நாளில் மீண்டு வரவே முடியாத அளவுக்கு மாற்றிவிடுகிறார்கள் என்பதே.

இங்கு இதுவரை 200 நோயாளிகள் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே இந்த போதை மறுவாழ்வு(?) மையத்தில் மூலம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாகவே மாறியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.