ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே ரசாயன லாரி மோதியதில் 30 லாரிகள் உள்பட பல வாகனங்களில் தீ பிடித்தது.
வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், 5 பேர் பலியாகியுள்ளனர், 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கேட்டறிந்தார்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றிலும் 3 பெட்ரோல் நிலையங்கள் இருப்பதால் அசாதாரண சூழல் நிலவுவதாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீ பிடித்து எரியும் வாகனங்களுக்கு அருகில் வீரர்களால் செல்ல முடியவில்லை என்றும், நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.