விபத்துக்குள்ளான கார் X | SP Bengaluru District Police
இந்தியா

கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து 6 பேர் பலி!

கர்நாடகத்தில் கார் மீது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி விபத்து

DIN

கர்நாடகத்தில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடகத்தில் நெலமங்கலத்தில், சனிக்கிழமை (டிச. 21) நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி ஒன்று மோதியது.

காரின் மீது சரக்கு லாரி கவிழ்ந்ததில், காரினுள்ளே இருந்த 6 பேரும் பலியாகினர். இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான சரக்கு லாரி

இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு லாரியின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT